பக்கம்:மின்னல் பூ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது வழி

மக்கள் அவர்கள் பாட்டைப்
பார்த்துக் கொண்டிருந்தனர்.
மழை காணாத பயிர் அவன் உள்ளம்
ஏங்கிற்று.
கரையற்ற அவன் அன்பும் ஒரு நொடிப்பொழுது
மறைந்து விட்டது.
என்ன மண்ணுலக மடா இது என்று கூட
வாய் ஒரு தரம் உச்சரித்து விட்டது.
உடல் நைந்தது.
ஆனால் கவிதைக் கனல் அவியவில்லை,
மேலும் மேலும் கொழுந் தோடியது.
உடலை வெதுப்பியது.
உள்ளத்தின் துடிப்பாக ஒலித்தது.
அவன் கந்தர்வ இன்பங்களைச் சொல்லில்
குழைத்துப் பூங்காற்றில் மிதக்க விட்டான்.
தாமரை மலரில் வீற்றிருக்கும் ஐயனின் சாந்தி
அவன் பாட்டில் தவழ்ந்தது.
பட்ட மரம் தழைத்தது.
பறவைகள் குதூகலித்தன; அவனுடன் உறவாடின;
அவனுக்கு மேலே பறந்து நிழல் செய்தன;
விலங்குகள் அவனைச் சூழ்ந்து கொண்டன;
காக்கையும், குருவியும், ஆடும் மாடும், சிங்கமும்

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/85&oldid=1121418" இலிருந்து மீள்விக்கப்பட்டது