பக்கம்:மின்னல் பூ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளம் தளராதே


உள்ளம் தளராதே—அருஞ்செயல்

ஊக்கம் குறையாதே
(உள்ளம்)


வெள்ளம் புரள்வது போல்—இடர்கள்
மீறியே வந்தாலும்
தள்ள முடியாமல்—மலையெனச்

தாழ்வுகள் நின்றாலும்
(உள்ளம்)


எங்கும் எதிர்ப்பெனினும்—துணைவரே
ஏசி இகழ்ந்தாலும்
வெங்கனல் வாளினைப்போல்—கவலைகள்

வெட்டிடும் போதினிலும்
(உள்ளம்)


கங்கை கொணர்ந்தவன் போல்—பணியில்
கண்ணும் கருத்துமதாய்
தங்கும் முயற்சி கொண்டால்—உலகில்

சாதிக்கலாம் எதையும்
(உள்ளம்)

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/88&oldid=1121424" இலிருந்து மீள்விக்கப்பட்டது