இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செந்தமிழ் போற்றிய சீதக்காதியே
இன்று நீ எம்மிடை இருந்திடல் விழைவேன்:—
செத்துங் கொடுத்த சீர்மிகுங் கொடையால்
இத்தரை மீதினில் என்றும் அழியாப்
புகழுடம் பெய்தித் திகழ்ந்தனை மெனினும்
சமயப் பிணக்கும் சாதிப் பிணக்கும்
குறுகிய நோக்கும் பெருகுமிந் நாளில்
அருந்தமிழ் வளமலால் பிறிதொன் றெண்ணா
வள்ளல் நீ யாக்கையில் வாழ்ந்தனை யானால்
உன்வழி கண்டு உய்வகை தெளிவோம்;
பிரிவினை அறியாப் பெருமைசேர் தமிழன்
அன்னாட் கண்டநல்லம் பறம் ஆண்மைசேர்
வாழ்வினை மீண்டும் வளர்த்திட
எளிதாம் என்றே ஏங்குமென் உளமே.
89