பக்கம்:மின்னல் பூ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பித்து

கண்ணீர் வழிந்தது
கட்டையும் நொந்தது
உருகிய துள்ளம்
உருண்டனன் தரையில்
அம்மா என்றே
அலறிமூச் சழிந்தான்

இமைகளும் சோர்ந்தன
எப்படியோ இவன்
உறங்கினான் இருளும்
ஒடுங்கியே பேரொளி
வந்தது விழித்தான்

அன்னை தன் மடியினில்
தன்சிரம் தாங்கிடக்
கண்டனன் காணக்
காட்சியுங் கண்டான்.

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/91&oldid=1121426" இலிருந்து மீள்விக்கப்பட்டது