பக்கம்:மின்னல் பூ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வழிமேல் விழி


வழிமேல் விழிவைத்து வரவேங்கி ஏனுயிர்த்தாய்?
அழிகாதற் பேதை நெஞ்சே! அனல்கொதிக்கும் இமைமூடிக்
கண்ணயர்ந்து கிடந்தாலும் கனவுலகிற் கண்டிடலாம்;
எண்ணமெலாம் அவராக ஏங்கியிந்தப் பிறைக்கூனி
நத்தைநிலா ஊர்ந்திழியும் நாழியெண்ணேல், ஊழியதே.
முத்து நிலாக் கண்வடிக்கும் முறையவர்க்கே எட்டாதோ?

பிறைக் கூனி-கூனி போல் வளைந்த பிறை நிலா. நத்தை நிலா-நத்தையைப்போல் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலா. முத்து நிலாக் கண் வடிக்கும் - முத்துப் போன்ற கண்ணீர் நிற்காமல் வடிக்கும் கண்.

97

மி.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/97&oldid=1121435" இலிருந்து மீள்விக்கப்பட்டது