பக்கம்:மின்னொளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

பரம்பரையா செஞ்சிவர்ற திருவிழா வாச்சே! நிறுத்தக்கூடாதே. காளியோட கோவம் ஊரையே எரிச்சிடுமே!

பொன் :- அதுதான் நானும் யோசிக்கிறேன். இது மாதிரி தடையுத்தரவு இத்தனை நாள் நம்ம ஊருக்கு வந்ததேயில்லியே.

வயிர - மாமா இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா?

பொன் :- யாருப்பா?

வயிர : அந்த வாத்தியாருப்பய செல்லத்துரை தான். இதெல்லாம் அநாகரிகம்; தடுக்கணும்னு மேலே விண்ணப்பம் போட்டிருப்பான். வந் துடிச்சி உத்தரவு. .

இருளன் :- உம்...இருக்கும் இருக்கும். நம்ம ஊரு க்கே வினாசகாலமால்ல வந்து சேந்திருக்கிறான். அயோக்கியப் பய எசமாங்க இதையெல்லாம் கவனிக்கணும். காளியாயி........

வயிர :- அவனை ஊருக்குள்ளே வச்சிருக்கறவரைக் கும், என்னென்ன விபரீதமெல்லாம் வருமோ! ஒரு வார்த்தை சொல்லுங்க மாமா! நான் பார்த் துக்கிறேன்.

இருளன் :- ஆமாங்க எசமான், இதைச் சும்மா உடப் படாது. பலிபூசை இல்லேன்ன ஊருக்கே அழிவுதான் ஒரு பயலுக்காக ஊரே நாசமாப் போற்த்ா? காளியாயி........

பொன் :- பொறுங்க. நானே அவனைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன். இப்ப, எது எப்படி இருந்தா

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/28&oldid=1412893" இலிருந்து மீள்விக்கப்பட்டது