நாடகம்
லும், நாம்ப அரசாங்க உத்தரவை மீறக்கூடாது.
இருளன் :- அப்படியானா பண்டிகை?
பொன் :- நிறுத்துவமா! சக்கரைப் பொங்கலோடவாவது சரிப்படுத்த வேண்டியதுதான்.
இருளன் :- (கைகளைப் பிசைந்து) ஐயோ! காளியாயி....நாங்க என்னம்மா குத்தம் பண்ணினோம்?
வயிர:- பூசாரி பொலம்பாதே. என்ன செய்யறது!
ஒன்பதாம் காட்சி.
(இருளன் வீடு. புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள் சடைச்சி. இருளன் வருகிறான். துணியில் கட்டி வந்த பழம் தேங்காய் பிரசாதங்களைச் சலிப்போடு கட்டில் மேல் போடுகிறான்.)
சடை - அப்பா ஊரிலே எங்கே பார்த்தாலும் அம்மை வந்திருக்காப்லே இருக்குதே!
இருளன் :- அதை ஏங் கேக்கறெ போ......
சபை - மணியக்காரர் மக, மின்னொளிக்குக்கூட வந்திருக்குதாமே?
இருளன் - ஏன் வாக்காது? அம்மை மாத்திரமா வாக்கும்? வாந்திபேதிகூட வந்து வாரிகிட்டுப் போவும்,
சடை:- ஏம்ப்பா அப்படிச் சொல்றே?
இருளன் :- ஆயாளோட பலிபூசை நின்னுது; வந்தது ஊருக்கே அனர்த்தம்! தெரியாமையா பெரிய வங்க பரம்பரையா பண்ணிகிட்டு வந்தாங்க?