பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மாமல்லன் சிம்சோன் சிம்சோன்: உன் வல்லமை யைப் பற்றிப் பெருமை பாராட்டாதே! முன்பு நீ என்ன செய்திருப்பாயோ அதை இப்போதே செய். உன் வல்லமைகொண்டு செய்து பார். அரப்பா: நான் ஒரு குருடனோடு பொருவதை வெறுக் கிறேன். என்னல் நீ தீண்டப்படுமுன் நீ நன்ருகக் கழுவப் பட வேண்டும். சிம்சோன்: உன்தன் மதிப்பிற்குரிய ஆண்டைகளும், பெலித்தியர்களும் வஞ்சகத்தால் மட்டுமே என்னை மேற் கொண்டனர். படைக்கலமின்றித் தனிதது நின்ற என்னைப் படையுடன் கூடிய அவர்களால் எதிர்த்துப் போரிட அவர்கட் குத் திறனில்லை, தெம்புமில்லை. அவர்கள் என் மனைவியைக் கையூட்டில் வஞ்சிக்கும் வரை, என் இல்லத்தில், ஏன் என் தூக்கத்தில்கூட என்னை எதிர்க்கும் துணிவு அவர்கட்கு இல்லை. என் மனைவியே, மேலான திருமண ஒப்பந்தத்தை மீறி, என்னை வீழ்த்திக் காட்டிக்கொடுத்துவிட்டாள். இப் போதுகூட நாம் இருவரும் தனித்துப் போரிட ஒர் அரங்கம் தேர்ந்தெடுக்கப்படட்டும். ஏனெனில் நாம் போரிடும் இடம் அரங்கமாக இருந்தால் உன் பார்வையின் உதவிகொண்டு நீ என்னைவிட்டுத் தப்பி ஓட முடியாது. அப்படி நாற்புறமும் அடைக்கப்பட்ட அரங்கிலே உன் எல்லாவிதப் பெருமைக் குரிய பெரும் படைக்கலன்களுடனும், தலைக்கவிப்புடனும், வெண்கல ஆடையுடனும், மார்பு, கழுத்துக் கவிப்புடனும், தறித்தடி நீளம் கொண்ட ஈட்டியுடனும், ஏழ்டுக்குக் கேடகத் துடனும் என்னுடன் வந்து மோதிப் பார். அப்படி அனைத்துப் போர்க்கலன்களோடும, கவிப்புடனும வரும் உன்னை, எதிாத்து ஒரே ஒர் ஒக் மரத் தடியில் உன் கவிப்புகளைத் தாககுவேன். ஏனெனில் அப்படித் தாக்கும்போது அவை ஒரு மாபெரும் ஒலி உண்டாக்கும் அல்லவா? ஆலை உனது அனைததுப் படைக்கலன்களும் உன் தலையை என் கைக்குத் தப்புவிக்க இயலாது. நீ பெருமை பாராட்டும் கையிலே உன் தலை பாது காப்பாய் இருக்கும். உன்னல் மீண்டும் கையைப் பார்க்க முடியாது.