பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மாமல்லன் சிம்சோன் இல்லை. உம் மகனின் விடுதலையினல் நீர் அடைய விரும்பும் மகிழ்ச்சி ஒரு தந்தைக்குரிய இயல்பேயாகும். ஒரு மகனின் விடுதலையிலும், உமது மகிழ்ச்சியிலும் உமக்கு அடுத்து நாங்கள் பங்கு பெறுவோம். மனுேவா: நீங்கள் சிம்சோனின் நண்பர்கள் என்பதை அறிவேன். ஒ! அது என்ன நடுக்குறும் பேரொலி. முந்திய பேரோசையினும் மிகுதியாக இருக்கிறதே. குழு ஆள்: நீங்கள் அதை ஏதோ பேரோசை என்கிறீர் கள். எனக்கோ அது உலகமே அழிக்கப்பட்டுத் துயரத்தால் முனகுவதைப்போல் இருக்கிறது. அந்த ஒலி கொடுமை யான குருதி சிந்தலையும், இறப்பையும், அழிவையும் சுட்டிக் காட்டுவது போலுள்ளது. மனுேவா: ஏதோ சில கட்டடங்கள் இடிந்து விழுந்து அழிவை உண்டாக்குவதுபோன்ற பேரொலியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒ, அந்த இடியோசை தொடர் கிறதே. அவர்கள் என் மகனைக் கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன், &(ԱՔ ஆள் எனது எண்ணத்தில் உம் மகன் அவர்களைக் கொல்வதுபோல் தோ ன் று கிற து. ஒரு தனி ஆள் இறப்பால் இப்படிப்பட்ட பேரிரைச்சல் ஏற்படாது. மனுேவா: இது ஒரு மாபெரும் அழிவாயிருக்க வேண் டும். இப்போது நாம் என்ன செய்யலாம்? இங்கு இருப்பதா? அல்லது ஒடிச்சென்று பார்க்கலாமா? குழு ஆள்: நாம் எல்லோரும் இங்கேயே இணைந்து இருப்பது நல்லது. இல்லையெனில் நாமும் நம்மையறியாமல் அந்த இடரில் விழுந்துவிடுவோம். இது பெலித்தியர்களின் தலையின்மீது விழுந்த அ ழி வு. அவர்களிடமிருந்துதான் இந்த இரைச்சல் ஏற்படுகிறது. மாபெரும் அழிவில் சிக்கிக் கொண்ட அவர்கள் நமக்கு இடையூறு விளைவிப்பது கடினம். மற்றவர்களிடமிருந்து நமக்குக் கேடு நேரிடும் என்று அஞ்சத் தேவையில்லை. இசுரவேலர்களின் கடவுளுக்கு எதுவும் முடியாததன்று. ஒருவேளை இறைவன் சிம்சோனுக்கு