பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தலைமகன் ஒருவனின் உயிர்க்குருதி போன்றது ஒரு நல்லேடு, அது நறுமணம் இட்டுப் பேணப்பட்டு வாழ்க்கை கடந்த பெருவாழ்வை எதிர்நோக்கிப் பதனம் செய்துவைக்கப் பட்டதாகும் என்ற மில்ட்டனின் மொழிக்கேற்ற ஏடுகளை எழுதுவதையும், அத்தகைய அரிய நூல்களையே வெளியிடு வதையும் வாழ் வி ன் குறிக்கோளாகக்கொண்டியங்கும் இன்றைய திரு.வி.க. வாகவும் விளங்கும் அருள்திரு. டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் இந் நூல் வெளிவருவதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தார்கள். இம் மூவர்க்கும் மிக்க நன்றியுடையேன். வாழ்விலும் கலையிலும் மாந்தர் ஒர் உவகையைக் காணவேண்டும், ஓர் உந்தாற்றலைப் பெறவேண்டும் எ ன் ற வேட்கையோடு மில்ட்டன் தீட்டிய மாமல்லன் சிம்சோன் வாழ்க்கைப் புரட்சிக்கு வழிகோலட்டும். தோழன் த. கோவேந்தன் xi