பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மாமல்லன் சிம்சோன் எவ்வகையிலும் குறையப்போவதில்லை. இதனினும் கொடிய துன்பம் உனக்குக் காத்திருக்கிறது. இன்று காசாவிலே, வருணன் என்னும் தங்கள் தெய்வத் தைச் சிறப்பிக்கும் பொருட்டுப் பெலித்தியர்கள் ஒரு புனித விருந்துகொள்ளவிருக்கிருர்கள். அந்த விருந்தும், விழாவும் பெரிய அளவிலே பகட்டாக்க் கொண்டாடப்படும் என்று அறிவித்திருககிருர்கள். இப்போது விலங்கிட்டுக் குருடாக்கப் பட்டுத் தங்கள் பிடியிலே இருக்கும் சிம்சோனிடமிருந்து தங்களை விடுவித்த மழைத் தெய்வத்திற்குப் பெருமை சேர்க் கும் வகையில் விழாக் கொண்டாடப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அவர்களில் பலரைக் கொன்று குவித்த உன் கைகளிலிருந்து பெலித்தியர்கள் விடுவிக்கப்பட் டிருக்கிருர்கள் ஆகவே இன்று வருணன் போற்றப்படவும், உனது உண்மையான ஒரே கட்வுள் தூற்றப்படவும் போகி முர். சிலைகளை வழிபடுகின்ற பெலித்தியர்கள், மதுவருந்தித் தங்கள் மழைத் தெயவத்தைத் தொழவும், உனது தெய் வத்தை இழிவுபடுத்தவுமிருக்கிருாகள். இவையெலலாம் உனது தவற்ருல நேர்ந்தனவே. இந்த மானக்கேடு, மிகவும் வெட்கக்கேடான இழிவாக உனக்கும், எனக்கும், நம் குடும் பத்திற்கும் நேர்ந்துவிட்டது. சிம்சோன்: தந்தையே! இந்த மானக்கேட்டையும், வசைகளையும் இசுரவேலர்கள்மீது நான் கொண்டுவந்ததை ஏற்றுக்கொள்கிறேன். வருணனுக்குப் பெருமையைக்கொண்டு வந்ததற்கு நானே பொறுப்பாவேன். உருவ வழிபாடு செய்ப வர்களுக்கும், உண்மையான இறைவன்பால் நம்பிக்கையற்ற வர்களுக்கும், உண்மைத் தெய்வத்தைப் புறக்கணித்துச் சிலை களை வணங்க விரும்புகிறவாகளுக்கும், நானே நல்ல வாய்ப்பை வழங்கிவிடடேன். இது என்னை மிகவும் தொல்லைப் படுத்துகிறது, வெட்கமுறச் செயகிறது, என் நெஞ்சத்தைச் சோர்விலை, துயரத்தால் நிரப்புகிறது. இந்த அளவிலாத் துயர் நான் விழிகள் முடித் துயிலகொள்ள முடியாமல் செய் கிறது; உள்ளத்தை உறு த் துகிறது. நான் இன்றும் உயிரோடிக்க ஒரே காரணம் என்னைப் பொறுத்தமட்டில்,