பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மாமல்லன் சிம்சோன் மீறிவிட்டனர். நீ அவர்களுக்கு இணங்கியிருக்கக் கூடாது. அடுத்து நீ உங்கள் மழைத் தெய்வத்தை மகிழ்ச்சிப்படுத்த இந்த வஞ்சகத்தை நீ புரிந்ததாய் மொழிந்தாய். கடவுளுக் கேற்ற வழிகளே விடுத்து, ஒவ்வாத கயமைப் பாதையில தன் எதிரிகளைத் தாக்க முயல்வது, உ ங் க ள் தெய்வங்கள் கையாலாகாதவர்கள் எனக் காட்டுகின்றது. அத்தகைய செயல்கள் தெய்வத்தன்மைக்கு எதிரானவை. அவர்கள் கடவுள்கள் அல்லர். அத்தகைய கடவுள்களைக் கண்டு அஞ்சவோ அடங்கவோ தேவையில்லை. உனது மனமாற்ற நாடகமும், பொய்யான காரணங்களும் தோற்றுபோய் விட்டன. அவற்றின் பொருளற்ற வெற்றுத்தன்மை வெளிப் பட்டுவிட்டது. உனது குறறத்தின் சாக் குப் போக்குகளும் அருவெருப்பும் வெறுத்துவிட்டன. இப்போது நீ மிகவும் கொடியவளாய்த் தோன்றுகிருய். தீலியாள்: என்னதான் தருக்கினலும் தருக்கில் ஆண், பெண்ணை வென்றுவிடுகிருன். சிம்சோன்: சொற்கள் இன்மையாலோ ஆர்வம் இன்மை யாலோ ஒரு பெண் தன் நோக்கத்தை இழந்துவிடலாம். ஆனல் நீ உன் வற்புறுத்தலினல் என்னைத் துன்புறுத்திய விதம் பெண்மையின் வாக்குத் திறமைக்கு ஒரு வலுவான சான்ருகும். தீலியாள்: நான் ஒரு முட்டாள். விளைவுகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் பின்பற்றிய வழிகளிலும், எடுத்துக் கொண்ட முடிவிலும் நான் விரைவுற்றேன். சிம்சோனே! என்னை மன்னித்துவிடு. பிறரால் தவருக வழிநடத்தப்பட்ட போது, நான் செய்த தவறுகளுக்காய் எப்படி ஈடுசெய்ய விழைகிறேன் என்பதைக்காட்ட எனக்கு ஒரு வாய்பபைக் கொடு. நடந்துபோனவற்றுக்காய்ப் பரபரப்படையாதே. உன்னுடன் இருந்து துன்புறுத்தும் துயர்களே ஆற்றும் மருந்தோ தீர்வோ இல்லை. நீங்கள் பார்வையிழந்திருபபினும் வாழ்க்கையில் ஆறுதல் அடைய வேறு பல வழிகளுண்டு. உங்களின் மற்ற உறுப்புகள் வாழ்வைச் சுவைக்க முடியாத படி செயலிழந்துபோகவில்லை. இல்லற இன்பத்தைச் சுவைக்க