பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘இதற்கு முன் காதலித்த நீங்களா இப்போது இப்படிச் சண்டையிட்டுக் கொண்டீர்கள்?’ என்றாள் மரகதம்.

‘ஊடல் இல்லாத காதலும் ஒரு காதலா? சர்க்கரை இல்லாத காபி போலல்லவா இருக்கும் அது!’ என்றது பெண் கிளி.

இதைக் கேட்டதும் மரகதம், 'கேட்டீரா கதையை?’ என்று மாணிக்கத்தின் பக்கம் திரும்ப, 'கேட்டேன், கேட்டேன்!' என்று அவன் சிரித்துக் கொண்டே அவள்மேல் சாய, 'ஆரம்பித்து விட்டீர்களா, அதற்குள்?’ என்று அவள் அவனைப் பிடித்து அப்பால் தள்ள, ‘காதல் போய் இங்கேயும் ஊடல் வந்துவிட்டதுடோய்!' என்று கூவிக்கொண்டே கிளிகள் இரண்டும் சிரித்து மகிழ்வதற்குப் பதிலாகச் சிறகடித்து மகிழலாயின.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘ஆண்கள் நல்லவர்களா, பெண்கள் நல்லவர்களா?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘இரு திறத்தாரிலும் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மீண்டும் அவரிடமிருந்து தப்பி, முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க.... காண்க.... காண்க......


7

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

காவற்காரன் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஏழாவது கதையாவது: