பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சங்கிலித் தொடர் போன்ற பரம்பரை நித்யம்-அழியாப் பரம்பரை-இன்னதென்று நான் அறிந்தேன்.

இது வெறும் உணர்ச்சியன்று. உண்மை. ஆற்றிலே வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் புதிய நீரை கொண்டு வருகிறது. எனினும் அந்த நதியை ஒரே பெயர் கொண்டுதான் அழைக்கிறோம். மாறுதலற்றது என்றே கருதுகிறோம்.

நித்யப் பிரவாகம்! தினசரி நாம் காணும் காட்சி இது. நம் முன்னே நடைபெறும் ஒன்று. எனினும் நாம் உய்த்துணர்வதில்லை.