பக்கம்:மீனோட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}{} மீனோட்டம் சன்னதியில் மின்விளக்கு கிடையாது. கர்ப்பக்ருஹத்தின் வாசல் ப்ரபை பூரா அடுக்கடுக்காய் அகல்ஜோதிகள் எரிகின்றன. அசப்பில், ஹோமகுண்டத்தின் நடுவே அவள் நிற்கிறாள். அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. இருளில் நெருங்கிய வெண்கல விளக்குகளின் சுடர் தரும் ஒளி, நிழலாட்டத்தின் செதுக்கலில் அவள் வெளிப்படு கிறாள். கற்பனையில் ஆவாஹனம் ஆகி, கவிதை (வெறும் சொற் கட்டுகள் அல்ல, இதயத்தின் அடிவார எழுச்சிகள்) ஊட்டி, அலங்கரித்து, உள் பார்வை காத்த உருவை, கேவலம் ஐம் புலன்களும் சேர்ந்த வெளிப்படையில் காண நேர்கையில் இத்தனை நாளையக் கனவு அந்தக் கணமே சிதைந்து போகும் துக்கத்தைக் காட்டிலும் கொடுமை வேறு இல்லைவேண்டாம். . ஆனால் இங்கோ வேறு. புழு வெடித்துத் தட்டாரப் பூச்சி கிளம்புவது போல், கருப்பையில் பொத்திப் போற்றிச் சுமந்து வைத்திருந்த சிசு வெளியாகி, முதன் முதலாய்த் தாயின் கண்ணுக்குப் படுவது போல், நனவின் பொலிவு கனவையும் மீறிக் காட்டுகையில்-இந்த அனுபவத்தை விவரிப்பது எங்ங்ணம்? - கண்டேன், உடைந்தேன். எனக்குக் கண்ட பயமே இது தானோ? உன் விருப்பமும் இதுதானோ? உன் விருப்பத்தைத் தான் என் பயமாய்க் கண்டேனோ? ஏதேனும் தைரியம் சொல்லேண்டி- . சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்து தள்ளிக் கொக்கரிக்கும் செளந்தர்யம். கிணறு வெட்டப் பூதம். கல்லைச் செதுக்கிக் கன்யாகுமரி, கல்மேல் உளிபிடித்த கையை நடத்தியவளே நீதானோ? ஸ்ஹிக்க முடியாத செளந்தர்யம் என்றால் அது இதுதான். போதும் போதும் தேவி, உன் அழகைக் காண் எனக்கு அருகதை ஏது என்று கண்ணைப் பொத்திக் கொண்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/101&oldid=870178" இலிருந்து மீள்விக்கப்பட்டது