பக்கம்:மீனோட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மீனோட்டம் அவள் செளகரியப்படி அமைப்பதற்கு ஏதோ திட்டம். அவளும் அவளைச் சார்ந்தவர்களும் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்கிறவரை தெரிந்தது. அவனை யறிந்துமா இப்படித் துரோகம்? இனி அவளுக்குப் புத்தி தானே திருந்தும் வரை அவளும் உய்ய வழியில்லை; அவனும் அவள் வீட்டுப் படியேறுவதற்கில்லை. அவள் குழந்தை பிறந்தால் கூட, அவன் இதயம் பட்பட் என அடிப்பது அவன் காதுக்கே கேட்பது போலிருந்தது. ஆறு மாதங்கள் கழித்து : என் கணவர் என்னைப் பற்றிக் கேட்காவிட்டாலும் நான் அவர் rேம லாபத்தையும் பற்றி அறிய ஆவலாயிருக் கிறேன். உங்களுக்குப் பிள்ளை பிறந்திருக்கிறான் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குழந்தை வயிற்றில் ஐந்து மாதச் சிசுவா யிருக்கையிலேயே அதன் தகப்பன் அன்பை இழந்து விட்டது. உங்களுக்கு உண்மையாகவே என்மேல் பிரியமிருந்தால் என்னை ஏன் இந்த ஆறுமாத காலமாய்ப் பார்க்க வரவில்லை? என் கடிதத் திற்கும் ஏன் பதில் போடவில்லை? என்மேல் தங்களுக்குக் கோபமிருக்க நியாயமேயில்லை. புருஷன் பெண்மைக்கு இழைத்ததைவிட, மனைவி என்ன செய்து விட்டாள்? நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பதைப் போல் நானும் இருப்பேன் என்று எதிர்பார்க்க முடியாதென்றால், உங்கள் வீட்டாருக்கும் எனக்கும் ஒவ்வாது என்றால், எனக்கும் உங்க ளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்து அர்த்தமா? எந்நாளும் உங்கள் அன்புக்கும், தேக செளக்கியத்திற்காகவும் கடவுளை இங்கே பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ரொம்ப வும் இளைத்துப் போயிருப்பதாய்க் கேள்விப்படுகிறேன். உடம்பை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்; வாரத்துக் கிருமுறை தவறாது எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்.” பிறகு : "நான் திரும்பத் திரும்ப எழுதியும் உங்களிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. குழந்தை பிறக்கு முன் என்னைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/119&oldid=870213" இலிருந்து மீள்விக்கப்பட்டது