பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதெப்போ விடியும் பூவெப்போ மலரும் சிவனெப்போ வருவார் பலனெப்போ தருவார் என்ற பசும்பொன் பகுதி வாய்மொழிப் பாடலில் அகமரபு தொடர்வதைக் காட்டுகிறார். 'பழம் வேர்கள் பற்றிய இரு கட்டுரைகளும் ஆய்வாளர்களுக்குப் பயன்படுவன. ஜப்பானிய ஹைகூ, அமெரிக்க ஆய்வுகள், மலையாள நாவல் போராசிரியர் பற்றிய விளக்கங்கள், காங்கோ நதியின் மூலம் தேடிய ஆய்வுகள் - என்று மீரா சுட்டிக்காட்டும் பலப்பல தரவுகள் மீராவின் புலமையைக் காட்டும். அவரின் தமிழ்நடை படைப்புத் திறன் காட்டும். புதுப்பார்வை மீராவின் விமர்சனத் திறன் காட்டும். அவர் கட்டுரைகள் தமிழின் படைப்பு நயம் காட்டும். இந்நூலின் தொடர்ச்சியாக மீராவின் பிற கட்டுரைகளையும் வெளியிட வேண்டும். தமிழ் பயன்பெறவேண்டும். 21.08.03 Li İT@} If