பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவா என் தலைவா! என் தலைவா இந்தத் தாரணியில் தமிழ் அணியின் கொடியை ஏற்றும் தலைவா என் தலைவா என் தலைவா! இந்தத் தலைமுறையில் குறள்முறையை மன்றம் ஏற்றும் தலைவா என் தலைவா என் தலைவா இந்தத் தாயகத்தார் தம்மகத்துள் விளக்கை ஏற்றும் தலைவா என் தலைவர்களின் தலைவா! உன்றன் தாள்களிலே தலைவைப்பேன்; கரங்கள் வைப்பேன் மூன்றெழுத்துக் 'குறள்' நூலை உலகுக் கீந்த மூன்றெழுத்துத் 'தமிழ் மொழியைப் பேணிக் காக்க மூன்றெழுத்துப் பகை 'இந்தி ஆதிக் கத்தை முறியடிக்க முதுகெலும்பை ஒடிக்க, வெல்லும் மூன்றெழுத்துப் பேரமைப்பை இயக்கிச் செல்லும் மூன்றெழுத்துத் தலைவா என் "அண்ணா உன்றன மூன்றெழுத்துப் 'புகழ்” பாடல் எளிதா என்ன? முக்கோடி எழுத்தாலும் முடியா தன்றோ? மீரா கவிதைகள் 0 125