பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! அலைகடல் எழுப்பும் ஆரவாரம்போல் வாழ்த்திசை வாழ்த்திசை வாழ்த்திசை எங்கனும்! மகளிர் நறிய மலர்களைத் துவப் பாவலர் பாராட்டுப் பன்னீர் தெளிக்க பாணர் உரிமைப் பண்ணைப் பாட மறவர் வீர வணக்கம் செலுத்த நெடுவான் தன்னையும் நிமிர்ந்த புகழால் தொடுவான் இவன் எனத் தொன்னிலம் இயம்பத் தலைவன் வருகிறான் தலைவன் வருகிறான்! அழுகிய முட்டை அனைய சாத்திரம் உடைக்கப் - புரட்சி உலகைப் படைக்க நச்சுக் கனியில் புழுத்த புழுப்போல் சதியில் புழுத்த சாதியைப் புதைக்க வறுமையும் பிணியும் வாழும் விழிக்குப் 14 0 மீரா கவிதைகள்