பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நங்கூரம் இல்லாத கப்பல் போல நாம்இருந்தோம்; ஒற்றுமையில் லாதி ருந்தோம்! இங்கொன்றாய் அங்கொன்றாய் மினுக்கும் வானின் இராத்தீப மாயிருந்தோம்; ஆனால் இன்றோ சங்கிலிபோல் பிணைப்புண்டோம்; ஒன்று பட்டோம்! சவுக்குமரத் தோப்பைப் போல் நெருக்க மானோம்! இங்கிதற்குக் காரணமாய் இருந்த சீனர் எல்லாரும் பல்லாண்டு வாழ்க! வாழ்க! இந்திய சீனப் போர் நிகழ்ந்தபோது எழுதியது - 1962 மீரா கவிதைகள் 0 186