பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ நன்றாய்ச் சொல்கின்றாய்; நீ வாழ்க! உன்கருத்தை என்மக்கள் உணர்ந்தே எழும்நாள்தான் எந்தாளோ? பொன்னாள், புதுநாள் புவனத்தில் அந்நாளே! 口 தான்மட்டும் தின்கின்ற தன்னலமில் லாததனால் வான்தொட்டு மீள்கின்ற வல்லமைநீ பெற்றாயோ? உன்னைக்கண் டிந்த உலகம் திருந்தாதா? என்ன உலகம் - இதில்நான் பிறந்தேனே....! 口 அன்னத்தைத் தூதாய் அனுப்பினனாம் ஒர் அரசன்; உன்னை நான்துதனுப்ப உத்தேசம்; நீ உதவு! சேரி குறைவற்ற சென்னையில் என்இன்ப வாரிதியாள் ஏக்கம் வளர்ப்பாள்; அவளிடம் உன் சிந்தைக் குரியான் சிவகங்கை யில் இருந்து வந்துகொண் டுள்ளான்; வருந்தாதே; என்று நீ கூறு! புறப்படு! கூறினால் கூட்டோடு சோறு படைப்பாள், சுவை! 54 0 மீராகவிதைகள்