பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கிருக்கும் ஆசையெல்லாம்....! அவன்: எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே! எள்ளளவும் மாசில்லாப் பொன்னால் செய்த வனப்புள்ள சங்கிலியை வாங்கி உன்றன் வாசச்சந் தனக்கழுத்தில் போட வேண்டும்; பனிமலரே, நீ மிகவும் கவர்ச்சி யாய் என் பக்கத்தில் வந்தமர வேண்டும்; அந்தத் தனியழகை நான் உண்ண வேண்டும்; உம்.... உ.ம்... தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்! எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான். கண்ணே! எப்படியும் பளபளக்கும் பட்டுச் சேலை உனக்கொன்று வாங்கிவந்து கொடுக்க வேண்டும்; ஒளிவிடியல் அமைதியைப்போல் திகழும் நீ, உன் இனிக்கின்ற உடலிலதை அணிந்து கொண்டே என்எதிரில் வந்துநிற்க வேண்டும்; அந்தத் தனியழகை நான்சுவைக்க வேண்டும்; உம்.... உ.ம்... தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்! 58 0 மீரா கவிதைகள்