பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்; கண்ணே! என்கையில் பணம்நிரம்ப இருக்க வேண்டும்; உனை அழைத்துக் கொண்டு நகர்ச் சந்தைக் குப்போய் உனக்குமிகப் பிடித்தமுள்ள பொருள்கள் எல்லாம் கனிவோடு நான் வாங்கிக் கொடுக்க வேண்டும்; கண்களினால் நீ சிரிக்க வேண்டும்; அந்தத் தனியழகை நான்பருக வேண்டும்; உம்....உ.ம்.... தைமாதம் பிறக்கட்டும்; வழிபிறக்கும்! அவள்: எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான். அத்தான்! இருவிழிக்கும் இருகைக்கும் இருதோள் கட்கும் நினைக்கமுடியாஇன்பம் அளிக்கும் பேசும் நிலாப்பிஞ்சைப் பெற்றெடுக்க வேண்டும்; அன்பு மனம்துள்ளப் பாலூட்ட வேண்டும்; என்றன் மார்புக்கும் மதிப்புவர வேண்டும்; அந்தத் தனியழகில் நாம் மயங்க வேண்டும்; உம்.... உ.ம்.... தைமாதம் பிறக்கட்டும்; மகன் பிறப்பான்! 'தமிழ்நாடு' ஞாயிறு மலர் மீராகவிதைகள் 0 59