பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் நிழலில் குடியிருக்க வேண்டுமடி !


காதலித்துப் பொங்குதடி சித்தம் - என்றன் கண்ணில் ஆசை பொங்குதடி நித்தம் - உயிர் பேதலித்துப் பிரிந்திடுமுன் பேசாமல் அளி, இன்ப முத்தம்! அழி பித்தம்!

தென்றலிலே பனிகண்டேன் முன்னம் - இன்று தீ கண்டேன் - காரணம் உன் எண்ணம் நெடுங் குன்றிழியும் அருவியெனக் கொதிப்படக்கத் தா, அமுதக் கன்னம்! என் அன்னம்!

இரவினிலே துயில்உண்டா? இல்லை - அடீ, ஏன் வளைத்தாய் உன்புருவ வில்லை? - தினம் பரவிவரும் நோய்தீர்க்கப் பக்கம்வந்து கொடு, மருந்துச் சொல்லை தடு தொல்லை!


84 மீராகவிதைகள்