பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறும்புக்காரி இரவுமணி பத்திருக்கும்..... மேல்மா டத்தில் இருந்தேன்நான் தென்மதுரைத் தென்ற லோடு! பருவத்தில் இளவேனில் போன்ற என்றன் பன்னீர்ப்பெண் அருகிருந்தே அளிக்கும் காட்சி விருந்துக்குத் துடித்தன.என் விழிகள்.... அந்த வேளையிலே, சோலையிலே மவர்ந்து பூப்போல் சிரித்தபடி ஒயிலாக வந்தாள் வந்து சீனியிட்ட பால்தந்தாள்: தேமாதந்தாள்: 'ஆவின்பால் உடலுக்குத் தேவை: உன்றன் அன்புப்பால் என்னுயிர்க்குத் தேவை. சங்கப் பாவின்பால் அன்றுமணங் கொடுத்தேன்; உன்றன் பார்வையின்பால் இன்றுமணங் கொடுத்தேன். கண்ணே! பூவின்யால் வண்டுவந்து பொருத்திக் காணும் புதுஇன்பம் மதுஇன்பம் தன்னை இன்று தாவின்யால் இதழின்பால் நயனத் தின்பால் நான்கானத்துங்காமல் ஏங்கு கின்றேன் & 3 மீராகவிதைகள்