இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வரைமட்டம் உயர்த்திப்பார்க்கும்
கவிஞர் கா.கா
புறநானூற்றைத் தேடிப்
புறப்பட்ட புதுக்கவிஞர்.
அடுத்த கவிதை
கலித்தொகையில்
சுவைத்துக் களித்த
சுந்தரக் கவிதை
'உன் பெற்றோர் பெயரை
உலக சாதனைப் புத்தகத்தில்
பதிக்க வேண்டும்
உன்னைப் படைத்ததற்காக'
என்கிறார்.
'நீயும் தவறிலை நின்னைப்
புறங்கடைப் போதரவிட்ட
நுமரும் தவறிலார்......
இறையே தவறுடையான்
என்று பெற்றோரின்
பெருமை பேசும்
சங்கப் பாட்டின்
சாயலில் அமைந்த
தங்கப்பாட்டு இது.
இன்னும் சிற்சில
கவிதைகளில்
தீட்டிக்காட்டும்
விசித்திரங்கள்
சிந்தை கவரும் சித்திரங்கள்,
110