மார்க்சியசித்தாந்தங்கள் கோஷங்களாக வீதிகளில் மட்டுமே உலவி வந்தால் போதாது அவை வீடுகளுக் குள்ளும் சென்று வசிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு; அப்படியானால் அந்தச் சித்தாந்தங்கள் இலக்கிய வடிவத்தில் வழங்கப்பட்டாக வேண்டும்; கவிதையாக, கதையாக, ஏன் சின்ன்ச்சின்னத் துணுக்குகளாகக்கூட.
தீவிர இடதுசாரி எழுத்தாளர்களின் இலக்கியங்களில் 'கோஷங்கள்' மட்டுமே மிஞ்சியிருக்கும் என்று ஒரு குற்றச்சாட்டு ஒரு பட்டிமன்றத் தீர்ப்புரையைப்போல இங்கே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட குற்றச்சாட்டை மிகநயமாக மறுதலிக்கும் மிக மென்மையாக முறுவலிக்கும் அற்புதமான எழுத் தோவியங்களும் இத்தொகுப்பில் உள்ளன. 'பாலையில் ஒரு சுனை', 'செடிக்கும் கொஞ்சம் பூக்கள்', 'உம்மாவோட மொகம்', 'தனிமையில் ஒரு தோழமை" போன்ற கதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அந்தக் காலத்திலே புகைவண்டி இல்லை; காசிக்கு வண்டி கட்டிப் போவார்கள். திரும்பிவரும். இரண்டே இரண்...டு மாடு” என்று கலைவாணர் 'கிந்தன்' நாடகத்தில் நகைச்சுவையாகச் சொல்வார்கள். அந்தக் காலத்தில் புகைவண்டியும் இல்லை, பேருந்தும் இல்லை, நடந்தோ மாட்டு வண்டியிலோ செல்லும் அவதி! இன்று எல்லாம் இருந்தும் பழனிக்கும் சபரி மலைக்கும் நடை! அப்படி நடக்கும் நபர்கள் ஒரு நாளைக்கு நியாயமான கோரிக் கைக்காக எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தம் அறிவித்துப் பேருந்து வரவில்லை என்றால் ஒரு மைல் தொலைவில் உள்ள அலுவலகம் செல்வதற்குக்கூட "இவனுகளுக்கு
115