குலைக்கப்படுகிறது தம்பி, அக்காளை அடிக்கிறான். ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீம் அடிபடுகிற போதும் காக்க முன்வராமல் வேடிக்கை பார்க்கிறான்.
இரு வேறுபட்ட வெறியர்களின் உணர்ச்சிக் கொந்தளிப் பில் சிக்கியவர்கள் வைத்தியர் அமானுல்லா குடும்பமும் பரமு - பச்சைக்கிளி குடும்பமும்,
"ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் உண்மையா
இருந்தா அப்பொறம் ஏன் கல்யாணம்னு அக்காவும் சொல்லுது.
மச்சானும் சொல்றாங்க.”
என்று சொல்கிற பச்சைக்கிளியின் தம்பி பரமு யூசுப்பை மச்சானாக அங்கீகரித்த பரமு - 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்ற தொல்காப்பியம் தோன்றுதற்கு முந்திய தமிழர் சமூக வாழ்க்கை நெறியை, அதைப் படிக்காமலே ஏற்றுக் கொண்டவனாகத் திகழ்ந்தான். ஆனால் படித்த, அதுவும் பி.ஏ., படித்த கோபால் அல்லவா.அதற்கு மாறாக மதவெறி உணர்ச்சிகளைத் தூண்டி போதை ஏற்றிவிடுகிறான். மதவெறி போதை ஏற்றப்பட்டான் ஒன்றுமறியாத பரமு என்பதை இன்குலாப் முன்கூட்டியே பச்சைக் கிளி மூலம் காட்டுகிறார்.
'ஒருவேளை அப்பா மார்ரி குடிக்கத் தொடங்கிவிட்டானா?'
குடிக்காவிட்டால் என்ன; மதவெறியும் ஒரு போதைதான். அதனாலன்றோ மார்க்ஸ் அதனை அபினி என்றார்.
மதவெறியைத் தூண்டுகிற தலைவர்கள் பாரதியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள். சைத்தான் வேதம் ஒதுகிறது என்பதைப் போல இவர்கள் பள்ளித் தலமனைத்தும்
125