பக்கம்:முகவரிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்பி செதுக்கிய
அற்புதச் சிலையாம்
இச்செஞ்சொற் கவிதையை
பாரதி அன்பர்கள்
படித்துப் பார்க்கட்டும்
பரவச மடையட்டும்

என் அனுபவம்....
படித்து முடித்ததும்
நோயில் கிடக்கும் நான்
நூறு வயது வாழும்
பேறு பெற்றதாய் மகிழ்கிறேன்
நெஞ்சம் நெகிழ்கிறேன்

'வரிந்து கட்டிக் கொண்டு
வருகிறேன் சாவே!
தெரிந்து கொண்டென்முன்
நிற்காதே நீயே" என்று
நிமிர்ந்து கவிதை படைக்கிறேன்

'கைதி எண் 253'
சிற்பியின்
புகழ் மகுடத்தில்
ஒரு புதிய மாணிக்கம்
செயற்கையாய் எழுந்த
செய்யுள் அல்ல
இயற்கையாய் மலர்ந்த
இலக்கியம்.

பாவேந்தர் இன்றிருந்தால்
இந்த நூலைப் படித்துவிட்டு

143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/144&oldid=970625" இலிருந்து மீள்விக்கப்பட்டது