பக்கம்:முகவரிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்பொரு முறை....
பாராட்டியது போல
'நாவூறிப் போனேன் நான்'
என்று சிற்பியைக்
கட்டித் தழுவுவார்
தட்டிக் கொடுப்பார்....
அந்த பாக்கியம்
எனக்கு
எப்படியோ கிடைத்திருக்கிறது

முன்பொரு முறை
என் கனவுகளுக்குப்பின்
கருவாகி உருவான
'மெளன மயக்கங்களை'
வாசித்துவிட்டு
என்னை
சிற்பி ஜெயித்து விட்டார்
என்று எழுதினேன்

இன்று எழுதத் தோன்றுகிறது...
சிற்பி ஜெயித்துக் கொண்டே
இருக்கிறார். எப்போதும் இருப்பார்

சிற்பி வாழ்க!
இனிது வாழ்க! நெடிது வாழ்க!

மகாகவி புகழ் வாழ்க!
வண்ணத் தமிழ் வாழ்க!

25.12.2001

144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/145&oldid=970744" இலிருந்து மீள்விக்கப்பட்டது