பக்கம்:முகவரிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ ஆசைப்படவில்லை
என்னைக் கொன்று விடுங்கள்'

என்கிறார்.

தோல்வி, நம்பிக்கை வறட்சி, ஆத்திரம், மிரட்சி, பிரமை, வெறுமை, தற்கொலைத்தாகம், அந்நியப்பட்டு நிற்கும் அவலம் - இவை ஏறத்தாழ எல்லாக் கவிதைகளிலும் குடி கொண்டுள்ளன.

இந்தக் கவிதைகளை ஆழமாக விமர்சிக்கலாம்; அது புண்பட்ட உள்ளத்தை மேலும் புண்படுத்துவதாகாதா?

ஒரு நோயாளியின் நெற்றியை ஆதரவுடன் வருடும் ஒரு தாதியைப் போல் ஒர் ஆதரவற்ற குழந்தையை அன்புடன் தூக்கும் ஒரு தாயைப்போல் இந்தக் கவிதைகளை வரவேற்போம்.

'நிஜங்கள் எனக்குப்
பயங்களாகின்றன'.

என்கிறார் கவிஞர்.

'தூங்கிக் கொண்டிருக்கவே என்னை
அனுமதியுங்கள்'

என்கிறார்.

கவிஞருக்கு ஒரு பதில்... நான் அப்படி அனுமதிக்க மாட்டேன்.

எழுக கவிஞரே, எழுக!

口 டிசம்பர், 1982

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/48&oldid=968508" இலிருந்து மீள்விக்கப்பட்டது