பக்கம்:முகவரிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருத்தமான சித்திரம்.

என்னைப்போலவே தமிழ்நாடனும் அவசர நிலையை எதிர்க்கவில்லை.

இந்திய சமூகத்திற்கு இனிமேல்தான் கதி மோட்சம் என்று அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது அவசரப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம்.

எதிர்பார்த்தோம்.

ஏமாந்தோம்.

இலட்சக்கணக்கான இந்திய சகோதரர்களின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடன் 'இந்திய அம்மா'வைப் பார்த்துப் பேசுகிறார்.

“நகம் வெட்டும் சாக்கில்
விரலையே வெட்டும்
செவிலியிடத்தில்
சிக்கிக் கொண்டாய் நீ"

உண்மையான சித்திரம்.

தமிழ்நாடன் இன்னும் பல அம்மாக்களை ஈன்றெடுக்கட்டும்.

தாலாட்டவோ பாலுட்டவோ நாம் தயார்.


மார்ச், 1978

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/54&oldid=968514" இலிருந்து மீள்விக்கப்பட்டது