இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போகமும்தான் - யோகமும்தான்
உடற்சேர்க்கை, உள்ளச்சேர்க்கை - இரண்டும்தான்
இரண்டும் சேர்ந்ததுதான் மகரந்தச் சேர்க்கை!
புலன்சார்ந்த - உடல் சார்ந்த காதலை வள்ளுவரும் புறக்கணித்ததில்லை.
'ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'
என்கிறாரே. அது என்னவாம்?
ஆண்டாளும் பாரதியும் புலன் இன்பப் புதுமைகளை மன்மதக் கலையின் மகிமைகளை - உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் வரிசையில் -
வசந்தருபனும் வந்து நிற்கிறார்......
அடடா... மோகக் கடலில் மூழ்கிக் களிக்கிறார்;
போகத்தில் ஒளிவீசும் முத்துக் குளிக்கிறார்.
"அவர்கள்
நூறு தடவை முத்தமிட்டனர்;
ஆயிரம் தடவை
ஆசையாய்த் தழுவி
அணைத்துக் கொண்டனர்
பின்னர் - சற்றே நிறுத்தினர்....
64