பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

9


1. மனித இனம்

உலகில் பிறந்த உயிரினங்களில், திலகமாகத் திகழ்வது மனித இனம்.

உடலால் உணர்வதன் மூலம், உலக இயற்கையை அறிந்து கொள்வது உயிரினங்களின் பண்பாகும். (Sense)

உலகை ஆள்கின்ற இயற்கையை எப்படி உணர முடியும் என்றால் புலன்களால்தான். புலன்கள் இயற்கையை உணருகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

இயற்கையின் வெளிப்பாடு எப்படி வருகிறது? ஒளியால், உயிர்ப்பூட்டும் காற்றின் ஒலியால், ஓசையால், நாற்றத்தால், தொடு உணர்வால், இவற்றையே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பார்கள்.

இப்படி உணர்கின்ற தன்மையில், இயற்கையை அறிந்து கொண்டும் புரிந்து கொண்டும் அதன் இனிமையால் வளர்ந்து கொண்டும் இடர்ப்பாடு ஏற்படுகிறபோது நழுவிக் கொண்டும் வாழ்கின்ற உயிரினங்களை, அவற்றின் தன்மைக்கேற்ப அறிஞர்கள் ஆறு வகையாகப் பிரித்தனர்.

1. ஓரறிவுயிர், 2. ஈரறிவுயிர், 3. மூவறிவுயிர், 4.நான்கறிவுயிர், 5. ஐயறிவுயிர், 6. ஆறறிவுயிர், எனத் தொகுத்து வகைப்படுத்தி விளக்கினர் நம் முன்னோர்கள்.