பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. ஓரறிவுயிர்:

ஓரறிவுயிர் என்பது ஒரு அறிவு உடையது. அறிவு என்பது உள்ளும் புறமும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது.

உடலால் மட்டுமே உணர்வுடைய உயிர். அதை உற்றறி உயிர் என்கிறார்கள். உற்று என்பது தன்மேல் இயற்கைபடுகிறபோது ஏற்படுகின்ற உணர்வுத் தன்மையை வைத்து. அது அறிந்து கொண்டு வாழ்வது. வளர்வது.

அதற்கு உதாரணம் புல், மரம்.

உடலால் மட்டுமே உணர்வு கொண்ட ஒருவனுக்கு, அறிவுத் தெளிவு இல்லாமல், இருப்பதை, மரம்போல நிற்கிறான் என்கிறோம். அந்த வகை அறிவுக்குப் பெயர் புல்லறிவு ஆகும்.

“குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்” என்று அவ்வைப் பிராட்டிப் பாடி, மர அறிவு என்ற ஒரு புதிய மரபையே வெளிப்படுத்துகிறாள். உடலின் மேற்பகுதியாக விளங்கும் தோல் ஐம்புலன்களில் ஒன்றாகும். இதை நாம் தோலறிவு என்றும் கூறலாம்.

2. ஈரறிவுயிர்:

இரண்டு புலன்களால், இயற்கையை, சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் சூட்சுமத்தை உணர்ந்து கொள்ளும் அறிவு. ஒன்று தோல் அறிவு இரண்டு நாவறிவு. அதாவது சுவை அறிவு.