18
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
5. காற்றுக்கும் மேலே விளங்குவது ஆகாயம். அதை ஒலி இன்பம் என்று கூறுவர்.
இதைத் திருமூலர் மிக அழகாகப் பாடிக்காட்டுவார்.
“உரம் அடிமேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிக் கீழ் அங்கி
கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தர மேல்வெளியாமே” (1937)
இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். உரம் அடிமேதினி என்பது மண் தத்துவம்.
உந்தியில் அப்பு என்பது நீர் தத்துவம்
மார்பகம் வரை என்பது தீ தத்துவம்
மார்பிலிருந்து தோள் வரை என்பது காற்றுத் தத்துவம்.
சுந்தரமேல் வெளி என்பது வானத்தத்துவம்.
இனி, இயற்கைத் தத்துவ அமைப்பு, உடலுக்கு எவ்வாறு இயையப்பட்டிருக்கிறது என்ற ஞானத்தை தெரிந்து கொள்ளலாம்.
1. இடுப்பிலிருந்து பாதம் வரை பூமியாகும். பூமி அனைத்தையும் தாங்குவது போல, காலிரண்டும். தூணாக இருந்து தாங்குகின்றன.
2. இடுப்பிற்கும் மார்புக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதி நீர்த்தத்துவம். சுவைதரும் நீராக, சுகிக்கும் நீர்ச்சுரப்பிகள் எல்லாம். இந்தப் பரப்பிலேதான் பெருமைக்குரிய இடம் பெற்றுக் கொண்டு விளங்குகிறது.