பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

23


ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், வழி நடத்துதல் என்றும் பொருளாகும்.

உழைக்கின்ற உடலையும், உறுதியுடன் கட்டளை இடுகிற மனதையும், உவப்புடன் உற்சாகப்படுத்தி வழி நடத்துகிற ஆற்றுமாதான் நாளடைவில் ஆத்துமா என்று அழைக்கப்பட்டு விட்டது.

காற்று என்பதை காத்து என்றும், சோற்று என்பதை சோத்து என்றும் பேச்சுவழக்கு ஆனதுபோல, ஆற்றுமாவும் ஆத்துமாவாக புதுப்பெயர் பெற்றுக் கொண்டது.

ஆத்மா எனும் காற்றுதான் உடலுக்குள் உயிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலுடன் விளங்குகிறது. அதுவே ஜீவ சக்தியாகவும் திகழ்கிறது.

உடம்புக்குள்ளே ஜீவசக்தியாக விளங்குகின்ற காரணத்தால். அதை ஜீவாத்துமா என்றனர்.

உள்ளே சுவாசிக்கப்படுகின்ற உயிர்க் காற்றானது. உள்ளே பத்து பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு உறுப்புக்களை வளமாக நலம்படச் செயல்பட வைக்கிறது.

பிராணவாயுவான உயிர்க்காற்று உடம்பின் உள்ளே பெற்றிருக்கும் பத்து வகைப் பிரிவுகளின் பெயர்கள் பின்வருமாறு.

1. பிராணன் , 2. அபானன் , 3. சமானன், 4. உதானன், 5. வியானன், 6. நாகன், 7. கூர்மன், 8. கிரிகரன், 9. தேவதத்தன், 10. தனஞ்செயன்.