பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

25


9. தேவதத்தன்: உடம்பில் உயிர்க்காற்று குறைகிறபோது கொட்டாவியை உண்டுபண்ணி அதிகக் காற்றைச் சுவாசிக்கச் செய்ய வைக்கும் கொட்டாவிக் காற்று.

10. தனஞ்செயன்: உடலிலிருந்து கடைசியாக இந்தக் காற்று வெளியேறுகிற போது, உடல் வீங்கியும் நாற்றமெடுத்தும் போகும். ஆகவே, இதை வீங்கற்காற்று என்பார்கள்.

ஆக, புறத்திலிருக்கும் அதாவது பரத்திலிருக்கும் காற்றான பரம் ஆத்மா, உடலில் புகுந்து ஜீவனைத் தருகிறபோது, அது ஜீவாத்மா ஆகி விடுகிறது.

ஜீவனானது, சத்திழந்த உடலிலிருந்து வெளியேறி விடுகிறபோது. அது வெளி உலகக்காற்றோடு கலந்து விடுகிறது.

இதுதான் ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்து விடுகிறது என்று பேசப்படுகிற விஷயமாகும்.

இந்த விஞ்ஞான் பூர்வமான விஷயத்தைத் தான் ஆத்மாவாக்கி, மதத்தை ஏற்படுத்தி விட்டனர். அதிலே த்வைதம் , அத்வைதம், வசிஷ டாத்வைதம் என்று பலவிதம் உண்டு.

அத்வைதம் என்பது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றெனும் கொள்கையுடைய மதம் என்பர். இதை ஏகாத்மவாதம் என்று கூறுவார்கள். இதை இரண்டன்மை என்றும் சொல்லுவார்கள்.