44
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
செய்யவேண்டும். அதாவது கட்டாயம் செய்தாக வேண்டும்.
உடலின் மேல் பரப்பில் தினம் தினம் மடிந்து போகிற செல்களை அப்புறப்படுத்தவும் தோலின் மேற்பரப்பில் உள்ள துவாரங்களை அடைத்துக் கெடுக்கிற அழுக்குகளை தூய்மைப்படுத்தவும். காற்றில் கலந்து தோலில் படிகின்ற மாசுகளை எண்ணெய் பசை போன்றவைகளை நீக்கவும் தினம் குளிப்பதால் முடிகிறது.
அதனால்தான் காலையில் குளிக்கும் பழக்கம் வேண்டும். முடிந்தவரை மேற்பரப்பைக் கழுவித் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவாளர்கள் கூறுகின்றார்கள்.
இத்தனை காரியங்களுக்கும் மேலாக முகத்திற்கும் செய்ய வேண்டும் என்பதைத்தான் நீங்கள் முக்கியமானதாக கருத்தில் கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள தோலுக்கும் முகத்தில் உள்ள தோலுக்கும் ஒரு நுண்மையான வேற்றுமை உண்டு.
முகத்தை மூடியிருக்கும் தோல் மென்மையானது. உடல் முழுதும் உள்ள தோல் பரப்பை விட நுண்மையானது. புலன்களுக்கு இனிமையானது.
எப்படி? ஐம்புலன்களின் சங்கமமே அங்குதானே குடிகொண்டிருக்கின்றன.
கண், காது, மூக்கு, வாய், தோல் என ஐந்து பிரிவுகளும். முகத்தில் அழகு படைக்கும் அவயவங்கள்தானே!