பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நேரங்கழித்து அலம்பிவிட முகப் பொலிவு தோன்றும். ஒரு சிலர் சாறு பிழிந்த எலுமிச்சம் பழத்தோலினால் முகத்தைத் தேய்த்துக் கொண்டு பிறகு அலம்புகிறபோது. முகத்தோற்றத்தில் ஒரு சுகமிருப்பதை உணரலாம்.

கோழிமுட்டையின் வெள்ளைக் கருவைச் சிலர் தேய்த்துப் பின் அலம்பிவிட்டு சிலர் முகப்பொலிவு பெறுவார்கள். இப்படி நாட்டுவைத்திய முறையிலே பல வழிகள் உண்டு.

எனவே உங்கள் இயற்கையான முகம், எண்ணெய்ப்பசை, தோல் அமைப்பு இவற்றுக்கேற்ப உங்கள் முக அழகைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஒப்பனையையும் அதற்கேற்ற முறையில் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம். எழுந்தால். முக அலங்காரத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனத்துக்கு (Beauty Parlour) சென்று ஆலோசனை பெறவும்.