உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3

பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில்
      புரிகின்ற முழுமதியே! உன்னைக் கண்டு
 மதுவுண்ட வண்டானேன்; இன்பப் பாடல்
      வாய்குளிர மனங்குளிரப் பாடி நின்றேன்;
புதுவுலகம் விரைவினில்நாம் காண வேண்டின்
      பொலிவுபெறும் முழுமதியர் ஆட்சி வேண்டும்
இதுவுண்மை எனநினைந்தேன்;களங்கம் உன்பால்
      இருக்கின்ற தெனஒருவன் இயம்பி னனே !

4

நிறைமதியர் நிலவுலகம் நிலைக்குங் காறும்
       நீள்புகழால் ஒளிபரப்பு வார்,இவ் வுண்மை
 நிறைமதியம் இரவிங்கு நிற்குங் காறும்
       நெடுங்கதிரால் ஒளிபரப்பிக் காட்டும்; மேலும்
குறைமதியர் புகழெல்லாம் வெளிப்ப கட்டாய்க்
       குறைந்துவிடும் மிகவிரைவில் என்ற உண்மை
 குறைமதியம் சிறுநேரம் பகட்டி வானிற்
       கூத்தாடி மறைந்துநமக் கெடுத்துக் காட்டும்

 
5

மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று
       மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்;
அதுமகிழ வானத்து மேடை ஏறி
       அம்புலியார் சொற்பொழிய முகிலன் ஓடி
எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான்,
       இடியிடித்தான், குழப்பத்தை ஆக்கி விட்டான்:
 இதிலென்ன கண்டனனே? மதியர் நாளே
       ஏருமல் இருப்பாரோ மேடை மீது ?

3

3