பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. யாப்பு 1. வெண்பா (குறள் - நேரிசை - இன்னிசை) ஈற்றடி முச்சீராயும் ஏனைய அடிகள் காற் சீராயும், காய்ச்சீரும் இயற்சீரும் வர, வெண்சீர் வெண்டளேயும் இயற்சீர் வெண்ட2ளயும்கொண்டு, மற்றைச் சீருந்தளையும் வராமல், செப்பலோசை உடையதாய், இறுதிச்சீர்கோசு-பிறப்பு-நாள்-மலர்' என்னும் வாய்பாடுகளுள் ஒன்றல் முடிவது வெண்பாவாகும். இது வெண்பாவின் பொது இலக்கணம் ஆகும். வெண்பா-வெள்ளைப்பா-முதற்பா என்பன ஒரு பொருளன. இவ் வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, ப..ருெடை வெண்பா எனப் பல வகைப் படும். (குறள் வெண்பா) குறள் வெண்பா, குறுகிய அடிகளால் (அ.. தாவது இரண்டடியால்) ஆகிய வெண்பாவாகும். 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு.' (ஒரு விகற்பம்) 'முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.' (இரு விகற்பம்)