பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் 1. செய்தித் தாள்களுக்குச் செய்திப்பத்திகள் எழுதியனுப்புதல். ஒரு பொருள் குறித்துத் தங்கள் உள்ளத்தில் எழுந்த கருத்துக்களைக் கோவைப்பட எழுதுதலேயே கட்டுரை என் கிருேம். அக் கட்டுரை பல திறத்தன. அவற்றுள், சில கட்டுரைகளே இவண் பயில்வோம். பள்ளியில் கடந்த விழாக்கள் பற்றிச் செய்தித் தாள்களுக்கு எழுதியனுப்ப மாணவர்கள் பயிற்சி பெறுதல் வேண்டும். காட்டாக, பள்ளியில் கடை பெறும் வள்ளுவர் விழா, பாரதி விழா, இலக்கிய விழா, தமிழர் திருநாள் முதலிய விழாக்கள் குறித்து எழுதி யனுப்பலாம். எடுத்துக்காட்டுச் செய்திப்பத்திகள்: (அ) காரைக் குடி மீ. சு. உயர் கிலேப் பள்ளியில் 14-8-167 திங்கட்கிழமையன்று இலக்கியக் கழக விழா நடைபெற்றது. மாணவர் ஒருவர் இறை வனக் கம் பாடக் கூட்டம் தொடங்கியது. பள்ளித் தலைமை யாசிரியர் யாவரையும் வரவேற்றர். தலைவரான பண்டாரகர் திரு. வ. சுப. மாணிக்கம் அவர்கள் தம் முன்னுரையில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையை யும், தனித் தன்மையையும் சான்றுகள் காட்டி கிறுவி ஞர். பள்ளி மாணவர்களான அறிவழகனும், வளவ னும் சிறு சொற்பொழிவு நிகழ்த்தினர். தலைவர் தம் முடிவுரையில், தாய்மொழி இலக்கியங்கள் தமிழர் யாவ ராலும் போற்றப்பெற்றுப் புரக்கப்பெறல் வேண்டுமென்