பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



8


மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும்.
(ந-நூற்பா 81.)

(ய, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு)

தாய் சேய்

இச் சொற்களில் உள்ள ய் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அஃது, அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும்.

இலக்கண விதி: அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால், ய் என்ற மெய் யெழுத்துப் பிறக்கும்.


அடிநா வடியண முறயத் தோன்றும்.
(ந-நூற்பா 82.)

(ர, ழ இவற்றின் முயற்சிப் பிறப்பு)

நீர் அமிழ்து

இச் சொற்களில் உள்ள ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும்.

இலக்கண விதி: மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால், ர், ழ் என்ற இரண்டு மெய் யெழுத்துக்களும் பிறக்கும்.


அண்ண நுனிநா வருட ரழவரும்.
(ந-நூற்பா 83.)

(ல, ள இவற்றின் முயற்சிப் பிறப்பு)

வெல்லம் வெள்ளம்