இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(ந-நூற்பா 81.)
தாய் சேய்
இச் சொற்களில் உள்ள ய் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அஃது, அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும்.
இலக்கண விதி: அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால், ய் என்ற மெய் யெழுத்துப் பிறக்கும்.
(ந-நூற்பா 82.)
நீர் அமிழ்து
இச் சொற்களில் உள்ள ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும்.
இலக்கண விதி: மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால், ர், ழ் என்ற இரண்டு மெய் யெழுத்துக்களும் பிறக்கும்.
(ந-நூற்பா 83.)
வெல்லம் வெள்ளம்