பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 குறிப்பெடுக்கின்ற பொழுது, இன்றியமையாக் கருத் துக்களையே குறித்துக்கொளல் வேண்டும். பிறகு அவற்றைப் பத்தித் தலைப்புக்களாக்கி எழுதுதல் வேண்டும். காட்டாக 14-2-57 இல் சத்தியமங்கலம் காட் டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில், முன்னுள் பொதுக் கல்வி இயக்குகர் திரு. கெ. து. சுந்தரவடிவேல் எம்.ஏ., எல். டி. அவர்கள் நிகழ்த்திய சொற்பொழி வின் குறிப்புக்கள். முன்னுரை-சரி நிகர் சமான மாக வாழ்தல்-மாண வர்களிட்ையே போட்டி வேண்டும்-வெற்றியும் வெறி யும் - நெற்பயிரும் கல்வாழ்வும் - அரசியலாரின் பங்கும் நம் கடமையும்-உடலுக்குச் சோறு, உயிருக் குக் கல்வி-பல கல்வி-உள்ளத்தில் உறுதி-கல்விப் பயன்-பசியே வெறுப்புக்கும் பொருமைக்கும் வித்துபசிப்பிணி மருத்துவர்கள் பெருகுக-முடிவுரை. இச் சொற்பொழிவுக் குறிப்பைக் கட்டுரையாக எழுதும் பொழுது, ஒவ்வொரு தொடரையும் கட்டுரைத் த2லப்பாக்கிக் கேட்ட்தை உளத்தமைத்து வேண்டிய செய்திகளைத் தொகுத்து எழுதுதல் வேண்டும். எழுது கின்ற கட்டுரைக்குத் தலைப்பிட்டு எழுதுதல்வேண்டும். இங்கே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்பொழிவுக் குறிப்புக்களை எடுத்துக் காட்டாகக்கொண்டு கட்டுரை எழுதிப் பழகுக. உரை வேந்தர் ஒளவை திரு.சு. துரைசாமிப்பிள்ளை 9-2-52இல் கடந்த பத்துப்பாட்டு மாகாட்டில் திருமுரு காற்றுப்படை பற்றி ஆற்றிய சொற்பொழிவின் குறிப் புக்கள்.