பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 கலங்கருதியும், தக்க இடைவெளி விட்டும், இடப் புறத்தில் சிறிது இட்ம் விட்டும் எழுதத் தொட்ங்குதல் வேண்டும். நும் பாடப் புத்தகத்தில் உள்ள பத்தியை நோக்கி இதனைத் தேர்க. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பத்தி களையும் நோக்குக : 'முன்பு இசைக் கலையின் உயிர் காடியாக யாழ்' என்னும் கருவி திகழ்ந்தது; அக் கருவியை இயக்கு வதிலே திறமை மிக்கதாய்ப் பாணர் குடி’ எனும் கலைஞர் பரம்பரை ஒன்று வாழ்ந்தது. காலவெள்ளத் தில் படிப்படியாக இப் பாணர் குலமும், யாழும், தமிழ்ப்பண் மரபும் மறைந்து போயின. 'நமது கலை யிழப்பு வரலாற்றில், உள்ளம் உருக்கும் உச்ச நிலை யில் நிற்பது யாழ் இழப்பு, வரலாறேயாகும்.” -தமிழண்ணல். இப் பத்தியின் கருத்து அல்லது குறிப்பு என்று கூறப்படும் யாழ்' பத்தியின் தொடக்கத்திலேயே வெளிப்பட்டு கிற்றலை நோக்குக. 'மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன், விலங்கு களின் தோலே மரங்களிற் காயப்போட்டு வைத் தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் உராயும்போதெல்லாம் ஒர் ஒலி எழக் கேட்டான். அதைப்பற்றி எண்ணினன்; தோற் கருவிகள் தோன்றின.' -தமிழண்ணல். இப்பத்தியில் "தோற் கருவிகள்” என்னும் குறிப்பு இறுதியில் நிற்றலை நோக்குக. 14