பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


3. ஆட்கொள் செல்வீ


அகம்மலர்த்தும் செந்தமிழே! உயிரே! மெய்யே!
அகிலத்து மொழிமுதலே! அன்பே! பண்பே!
புகல்[1]கொடுத்துச் சிறியேனை ஆட்கொள் செல்வீ!
பொழுதெல்லாம் களிப்பருளும் தெய்வத் தாயே!
பகைதவிர்த்துத் தமிழ்பாடும் என்றன் நாவால்
பாரறிய தாயுன்றன் புகழு ரைக்க
வகைவகுத்த சொற்பொருளால் அணியால் ஆன்ற[2]
வளமிக்க கவிவெறிஎன் நெஞ்சில் ஏற்று!

[கவியரங்கில் முடியரசன்]


 

உயிரே மெய்யே : உயிரும் மெய்யும் போன்ற தமிழே,
 உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஆகிய தமிழே,

  1. புகல் : தஞ்சம்
  2. ஆன்ற : நிறைந்த