பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப்
பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் - என்றன்
ஓவிய மேபுகழ்க் காவியமே”

“பெற்றெடுத்த தாய்தந்தை பேர்காக்கும் மைந்தர்களைப்
பெற்ற குடும்பந்தான் பேறுபெற்ற நற்குடும்பம்;
ஆதலினால் குடும்பமது சுவையால் நெஞ்சை
அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும்;
காவியத்தைக் காத்திடுக வாழ்வீர் நன்றே”

“பூமருவு மணமாலை பூண்டு நெஞ்சுட்
புகுந்திருவர் ஒருவரென ஆகி நின்றார்
தாமரையும் மணமுமென இல்ல றத்தில்
தாமிணைத்தோர் அணிகலனாய் விளங்கி நின்றார்”

- கவியரசர் முடியரசனார்