பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை - சொன்னால்
          உடனே அழுவேன் வெறுப்பதிலை
கள்ளங் கவடந் தரிப்பதிலை - நீயேன்
          கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?

அழுக்கா றாசை வெகுளியெனும் - நெஞ்சின்
          அழுக்குகள் யாவுங் கழுவினை நீ
இழுக்கா மானம் அருளறிவு - அணிகள்
          எத்தனை எத்தனை அருளினை நீ!

நின்னருள் மாமழை பொழிந்திடுவாய் - நானும்
          நீங்கா ததனுள் நினைந்திடுவேன்
என்னுயிர் நீதான் தமிழம்மா - என்னை
          எடுத்தொரு முத்தம் அருளம்மா.

[பாடுங்குயில்]