இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன் - அங்கே
எத்தனை எத்தனை ஆய்ந்திருப்பேன்
மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன் - நீயேன்
வந்தரு ளாமலே ஓய்ந்திருந்தாய்?
உன்னை விடுத்தொரு சுற்றமில்லை - நெஞ்சில்
ஒட்டிய வேறொரு பற்றுமில்லை
என்னைப் புரப்பதில் குற்றமில்லை - அம்மா
ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை ?
[பாடுங்குயில்]