பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இன்ப மெனுங்கடல் பாய்ந்திருப்பேன் - அங்கே
          எத்தனை எத்தனை ஆய்ந்திருப்பேன்
மன்பதை உய்ந்திட ஈந்திருப்பேன் - நீயேன்
          வந்தரு ளாமலே ஓய்ந்திருந்தாய்?

உன்னை விடுத்தொரு சுற்றமில்லை - நெஞ்சில்
          ஒட்டிய வேறொரு பற்றுமில்லை
என்னைப் புரப்பதில் குற்றமில்லை - அம்மா
          ஏங்குதல் நீதியோ பெற்றபிள்ளை ?

[பாடுங்குயில்]